
அராலி மேற்கு வைத்தியசாலை வீதி மற்றும் அராலி மத்தி பகுதி வீதிகளுக்கு இன்று வீதி விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டன.
வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா இலங்கேஷ்வரன் மற்றும் பொதுமக்களின் நிதிப் பங்களிப்பில் வலி. மேற்கு பிரதேச சபையின் ஊழியர்களால் இந்த வீதி விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டன.
இருளின் மத்தியில் மக்கள் அவ்வீதியால் பயணம் செய்யும்போது பல இடர்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வீதி விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
