<!–
தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
20 பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பொதி 5 ஆயிரத்து 771 ரூபாய் பெறுமதியானதாகும் எனவும் இது 3 ஆயிரத்து 998 ரூபாய்க்கு மக்களுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தப் பொதியை தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளில் பெற்றுக்கொள்ளவதற்கு 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.