
கண்டி தலதா மாளிகைக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
பிரதமரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை பிரதமர் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அனுசாசனத்தை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரர் பிரதமருக்கு புத்தர் சிலையொன்றை பரிசளித்தார்.
