
ஒமிக்ரான் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக மூன்றாவது கட்ட பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால், இன்று யாழ்ப்பாணம் – கோட்டை பகுதியில் இச் செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ்;, இச் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றமையால், இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
