
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22 ஆம் திகதி 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.