மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணி அளவில் சட்டவிரோத மணல் அகழ்து உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்தபோதும் உழவு அயந்திரம் பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில் பொலிஸார் அதனை துரத்திச் சென்ற நிலையில் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவரது தோள்பட்டடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *