பேரழிவை நோக்கிச் செல்லும் நாடு! சுகாதார சங்கம் எச்சரிக்கை

ஒமிக்ரான் மாறுபாடு நாட்டில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை.

பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை புறக்கணிப்பதனால் நிலைமை மோசமடைந்துள்ளது.

தொற்றுநோய் கடந்துவிட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸினை பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

அதிகாரிகளினால் உறுதிபடுத்தப்பட்டதை விட ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஒமிக்ரான் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கொரோனாத் தொற்று முடிவுக்கு வரலாம்! ஜயசுமன தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *