எரிபொருள் இல்லை: நாளை முதல் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்!

அனல் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு நாளை செவ்வாய்க்கிழமை காலை வரைக்கும் மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் நாளை காலையுடன் முற்றாகத் தீர்ந்துவிடும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நீண்ட காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இவ்வாரம் இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 22 வரை எரிபொருள் வழங்குவது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேசவுள்ளோம்.

இதுவரை எமக்கு எரிபொருளை வழங்காவிட்டால் என்ன செய்வது? என்பதை நாங்கள் தீர்மானிப்போம் எனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *