
இலங்கை அரசாங்கம், தேவையேற்பட்டால், நான்காவது தடுப்பூசி செலுத்த தயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று பரவி வருகின்ற நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நான்காவது தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யப்போவதில்லை. எனினும், தேவையேற்படும் போது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அமைப்பு ஏற்பாடுகள் உள்ளன.- என்றார்.