
திருகோணமலை – ரொட்டவௌ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த மொரவௌ பிரதேச சபை ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த சந்தேக நபர் சேனை காவலுக்காக சென்ற போது அவரை பின் தொடர்ந்து அவர் தங்கியிருந்த குடிசையை சோதனையிட்ட போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மொரவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.