யாழ். பல்கலையில் மாபெரும் பொங்கல் விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் பொங்கல் கலை கலாச்சார விழா இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்று வருகின்றது.

பரமேஸ்வரா வீதி ஊடாக மேள தாளம், நாதஸ்வரம் முழங்க, பாரம்பரிய நடனங்களோடு விருந்தினர்கள் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த மாபெரும் பொங்கல் விழாவில், இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும், கலைஞர்களையும் இணைத்து கலை நிகழ்வுகளும் இடம்பெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ. சற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி பராநந்தகுமார், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, அகில இலங்கை சைவமகாசபை பொதுச்செயலாளர், பீடாதிபதிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *