அரைகுறை பரீட்சையால் அவதிப்படும் மாணவர்கள்! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

முதலில் ஒரு பரீட்சையை நிறைவு செய்து அதற்கான, முடிவுகளை வெளியிட்ட பின்னர் ஏனைய விடயங்களை ஆராய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலர் ஜோசப்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாம் அறிந்த விடயம் உயர்தர பரீட்சை நடத்த திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது பெப்ரவரி ஆரம்பமாக உள்ளது.

மற்றும் கடந்த வருடம் நடந்த சாதாரண தர பரீட்சையில் அழகியல் பாடத்திற்கான செயன்முறை பரீட்சை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கொரோனாத் தொற்று மற்றும் ஆசிரியர்களிற்கு ஏற்பட்ட சில சிக்கல் நிலைமைகளால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 8ஏ சித்தியுள்ள பிள்ளைகள் இன்னலுக்கு உற்பட்டுள்ளனர். இதற்கு பரீட்சை தினணக்களம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே வேளை, 2020, 2021ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பாடல் பரீட்சை நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *