
இலங்கை வரலாற்றில் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லேரியா பி.சி.ஆர் ஆய்வுக்கூடம், 200 கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களின்றி வெறிச்சோடி காணப்படுவதாக சுகாதார நிபுணர்களின் நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூடத்தின் அனைத்து பூர்வாங்க வேலைகளும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நிறுவப்பட்டது. ஆய்வகத்தில் உள்ள உபகரணங்கள் சீன நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
கடந்த மே மாதம் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு தயார் என தெரிவிக்கப்பட்டு, பின்னர் அதன் செயற்பாட்டை காணவில்லை.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுத்துள்ளன. ஆய்வகத்தை உருவாக்க எவ்வளவு பணம் செலவானது, ஆய்வகங்களின் துணை இயக்குநர் ஜெனரல் செயல்முறையிலிருந்து ஏன் நீக்கப்பட்டார் என்பது தெரிய வேண்டும்.
மேலும், உள்ளூர் ஏஜென்சி இல்லாமல் களவாக பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்பது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.