வடமாகாண பிரதம செயலாளரின் குடும்பத்திற்கும் கொரோனா

வடமாகாண பிரதம செயலாளருக்கு நேற்று புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே சுகாதார பிரிவினர் அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

மேலும், வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளதோடு, அதில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்வாக தேவைகள் நிமித்தம் வடமாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *