அபுதாபியில் மூன்று எரிபொருள் டிரக்குகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: 3பேர் உயிரிழப்பு- 6பேர் காயம்!

அபுதாபி விமான நிலையத்திற்கு மூன்று எரிபொருள் டிரக்குகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்பு வசதிகளுக்கு அருகிலுள்ள தொழில்துறை முசாஃபா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத காட்சிகள், முசாஃபா பகுதியில் இருந்து வெளிவரும் கரும்புகையின் அடர்த்தியான புகையைக் காட்டியது.

ஆரம்ப விசாரணையில், வெடிப்பு மற்றும் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய இரு தளங்களிலும் ஆளில்லா விமானமாக இருக்கக்கூடிய சிறிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,’ என்று அபுதாபி பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தை உள்ளடக்கிய சவுதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்துப் போராடும் யேமனின் ஈரானுடன் இணைந்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள் இயக்கம், சவுதி அரேபியா மீது அடிக்கடி எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதுபோன்ற சில தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரகம் மீதும் தொடுத்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இதனை அமீரக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *