
நாட்டில் இன்னமும் பாரிய மிசார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை, அவ்வாறான நிலை ஏற்படாது என மின்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை துன்டிக்காமல், செயற்பாடுகளை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்து வருகின்றோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே மின் துண்டிப்புகள் ஏற்படுகிறது.
மின்சாரம் தடைப்பட்ட வேளைகளில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை மற்றும் ஒவ்வொரு வருடம் மின்சார சபைக்கு எவ்வளவு எண்ணெய் தேவைப்படுகிறது என்பதை அரசாங்கம் சரியாக பிரிக்க வேண்டும்.
சாதாரண மக்களுக்கும் எண்ணெய் அவசியம். மற்றும் நாட்டில் டொலர் பற்றாக்குறை இருக்கின்றது. ஆகையால், எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுகின்றது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார். அது அவர் கூற வேண்டிய அவசியம் இல்லை அனைவரும் அறிந்த விடயமே ஆகும்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால் டொலர் இல்லை. கொரோனா தொற்று காரணமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
வெயில் காலங்களில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. மழை காலங்களில் இல்லை என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் மழை காலங்களில் மின்சாரம் குறைவாக காணப்படுகிறது என்பதால், மஹிந்த ராஜபக்ஷ நுரைச்சோலை மின் நிலையத்தை ஆரம்பித்து, 15 ரூபாவால் மின் கட்டனத்தை குறைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.