
நாட்டில் பயிரிடப்படாத அனைத்து நிலங்களிலும் இவ்வருடம் பொருத்தமான உணவுப் பயிர்கள் பயிரிடப்படவுள்ளதாகவும், இந்த நடவடிக்கை தொடர்பில் அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்தாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சுமார் 100,000 வீட்டுத்தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்படும் பற்றாக்குறையை நிர்வகிக்க இவ்வேலைத்திட்டத்திற்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 100,000 ஏக்கர் தரிசு நிலங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இந்த நிலங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிட பயன்படுத்தப்படவுள்ளன.
இராணுவ முகாம்கள், அரச பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களிலுள்ள பயிரிடப்படாத நிலங்களை உடனடியாக உணவுப் பயிர்கள் பயிரிடப் பயன்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்திற்காக 560 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.