வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் கணவரால் முறைப்பாடு ஒன்று போடப்பட்டுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

Advertisement

குறித்த பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 10.08.2021 அன்று கணவர் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

சக்குணசிங்கம் தமிழினி வயது 32, மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா வயது 5,கனிஸ்கா வயது 4 ஆகியோரே காணமல் போனவர்கள் ஆவர் இது தொடர்பான விசாரனகைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில்

இவர்களை காண்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அல்லது கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறும் கணவர் உருக்கமாக கோரியுள்ளார் 0777111103 , 0775945839

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *