பொரளை கைக்குண்டு சம்பவம்! மேலும் ஒருவர் கைது

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் கடவத்தை, பியன்வல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடையவராவார்.

கடந்த 11 ஆம் திகதி பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த தேவாலயத்துடன் நீண்டகாலமாக தொடர்பு கொண்டிருந்த மருதானையை சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *