
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வகுப்புகளை நடத்த முடியாது.
நள்ளிரவு முதல் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் தொடர்பான சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் அல்லது பரீட்சை வினாக்கள் அல்லது அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக அது போன்ற கேள்விகள் தொடர்பான பிரசுரங்களை வைத்திருப்பதும் தடைசெய்யப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தகைய விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஈழத் தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது! சிறிதரன் எம்பி