சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதல்கலைப் போன்று தாக்குதல் நடத்தினாலும், அவற்றுக்கு ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாகத்தான் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *