காரில் வந்த கோட்டாவை பணிந்து கும்பிட்ட உயர் அதிகாரி! வெடித்தது சர்ச்சை

அதிவேக நெடுஞ்சாலையில் பயண அனுமதிக்கான சீட்டு கொடுக்கும் நபர், ஜனாதிபதி கோட்டாபயவை கைகூப்பி கும்பிடும் புகைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு ஜனாதிபதியை பணிந்து குடும்பிடுபவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் ஒரு பொறியிலாளர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு படித்தவர்கள் பணிந்து குடும்பிடுவது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் மூத்த அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான குசல் பெரேரா சமூக வலைத்தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை திறப்பதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் காரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.

அதன் போது பயண அனுமதிக்கான சீட்டு கொடுக்கும் நபர், கை கூப்பி கும்பிட்ட செயற்பாடானது ஒட்டுமொத்தக் கல்விமுறையின் இறுதியான திவால் நிலையாகும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *