இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது , 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *