
நாட்டு இளைஞர்களை பயன்படுத்தி விவசாயம் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை,அதிகரிப்பதோடு,யாழ்ப்பாண ஆற்று திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ,ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த புதிய ஆண்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கொரோனா எமக்கு சொல்லி தந்து விட்டது.
இந்த ஆண்டு உணவு காப்பு என்ற தலைப்பில் நாம் வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவதும் பற்றி நாம் இப்போது உணர்ந்து விட்டோம்.ஆகவே அனைத்து விவசாய நிலங்களையும் இம்முறை பயன்படுத்த வேண்டும்.
சுவர்களை வர்ணம் தீட்டி அழகு படுத்திய இளைஞர்களை நாம் பாராட்டுவதோடு ,அவர்களை உற்பத்தி நடவடிக்கையில் நாம் இம்முறை ஈடுபடுத்த வேண்டும்.
20 சிறப்பான நீர் பாசன திட்டங்கள் இம்முறை நடைமுறை படுத்தப்படும்.
அதில் யாழ்பாணத்துக்கு ஆறு என்ற திட்டம் இம்முறை ஆரம்பிக்கப்படும்.கொரோனா நிலை காரணமாக நாம் பலவற்றை இழந்து விட்டோம்.
அதில் குறிப்பாக ஒரு ஆண்டுக்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை சுற்றுலா துறையில் இழந்து விட்டோம்.
2 லட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து மீண்டும் வேலைகளை விட்டு விட்டு நாடு திரும்பியுள்ளனர்.
இதனால் அந்நிய செலாவணி எமக்கு பிரச்சினையாக மாறி விட்டது.செலவுகளை கட்டுப்படுத்தவே வாகன இறக்குமதியை தடை செய்தோம்.
அத்துடன் அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தினோம்.
இங்கிருந்து மாணவர்கள் வெளிநாட்டுக்கு சென்று கல்வி கற்கின்றனர்.அவர்களுக்கான தரமான கல்வியை இங்கேயே வழங்கி அவர்கள் கல்வி கற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதே போன்று வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் இங்கு வளர்த்து கல்வி கற்கும் அளவுக்கு இங்கு ஏற்பாடுகள் இல்லை.அதை நாம் கவனமெடுத்துள்ளோம்.
தொழில் நுட்ப துறை ரீதியில் நாம் முன்னேற வேண்டும்.அப்போது தான் நாம் அபிவிருத்தி அடைய முடியும் என தெரிவித்துள்ளார்.
காரில் வந்த கோட்டாவை பணிந்து கும்பிட்ட உயர் அதிகாரி! வெடித்தது சர்ச்சை