கோட்டாவின் உரையில் ஏமாற்றம் : தேநீர் விருந்துபசார நிகழ்வினை புறக்கணித்த கூட்டமைப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சனை, தீர்வு விடயம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அத்தோடு தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எவ்வித அறிவிப்பையும் ஜனாதிபதி வழங்கவில்லை.

இந்நிலையில் குறித்த தேநீர் விருந்துபசார நிகழ்வினை கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆதவன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *