
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட சப்பைரதம் இம்முறை கொழும்பில் வீதி உலா வரவுள்ளதாக கொழும்பு வத்தளை சிவசுப்பிரமணிய தேவஸ்தான நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
கொரோனா நிலைமைகளால் தடைப்பட்ட திருவிழா, இரண்டு வருடங்களுக்கு பின்னர் குறித்த ஆலயத்தில் இம்முறை இடம்பெறவுள்ளது.
அத்துடன், முத்தேர் பவனியும், சப்பைரத பவனியும் இம்முறை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
