இது அமெரிக்காக இல்லை இலங்கை! ஹிருணிகா எம்.பி சாடல்

தற்போது காணப்படும் அரசாங்கத்தை அனைத்து மக்களும் விமர்சித்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் பல வித பிரச்சினைகளால், இந்த அரசால் நாட்டைவழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

நாம் எங்கு பயணிக்கும் போதும் நாம் காணக்கூடிய ஒன்று, மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்குவது. அனைத்து பொருட்களிற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு செல்லுமானால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும்.

அதே போல நாடு எந்த ஒரு கஷ்டமான காலகட்டத்திலும் சாப்பிடமாமல் இருந்தது இல்லை.

பல ஆண்டுகளாக பழக்கப்பட்ட உரத்தை முற்றாக நிறுத்திவிட்டு இரசாயன உரம் தருகிறோம் பயன்படுத்துங்கள் என்று கூறுவது சரியா?

சாதாரணமாக நெல் விளைவதற்கு 3 மாத காலங்கள் எடுக்கும். புதிய உரங்கள் இம் மண்ணிற்கு பழக்கப்பட அதிக நாட்களாகும்.

2 ஆண்டுகள் நாட்டை நாசமாக்கி விட்டு எதிர்வரும் வரும் ஆண்டுகளில் சிறப்புற செய்வோம் என கூறுவது சரியா?

மற்றும் ராஜபக்ஷ என்ற பெயரில் அவர் கட்டி எழுப்பிய மதிப்பு, ஒரு நபரால் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டை கட்டியெழுப்ப சஜித் பிரேமதாச ஒருவரால் மட்டுமே முடியும்.

நாங்களும் நினைத்தது அமெரிக்காவில் இருந்தவர் நாட்டை அபிவிருத்தி செய்வார் என்று. ஆனால் அவர் நாட்டை வீணடித்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

சிறப்பாக இடம்பெறும் கொழும்பு வத்தளை சிவசுப்பிரமணிய தேவஸ்தான மகோற்சவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *