மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த லங்கா IOC

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குமாறு லங்கா ஐஓசி நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தமது கையிருப்பில் மேலதிக எரிபொருள் காணப்படாமையை சுட்டிக்காட்டி, லங்கா ஐஓசி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இந் நிலையில் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், மின்சார சபைக்கு 900 மெட்றிக் தொன் எரிபொருளை வழங்கும் நடவடிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *