கல்முனை தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

கல்முனை தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. குஞ்சுத்தம்பி ஏகாம்பரம்

கல்முனை தமிழர்களின் பூர்வீக வதிவிடத் தாயகம் என்பதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. இதனை மறைத்து கல்முனையில் 1989 ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்டு வரும் வடக்குப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தக்கூடாது, கல்முனை முஸ்லிம்களின் தாயகம், இதில் வெளிமாவட்டத் தழிமர்கள் தலையிடக்கூடாது என்ற தொனியிலும், இதற்கு முன் 2016.09.30 ஆம் திகதி அன்று அனைத்து பள்ளிவசால்களினது பொது அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் மருத்துவக் கலாநிதி S.M.A அஸீஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தென்கிழக்குப்பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் ஜனாப். H.M.நிசாம் அவர்களால் கல்முனை முஸ்லிம்களின் வரலாற்றை திரிபு படுத்தும் சதித் திட்டத்திற்கு எதிராக கல்முனை பிரகடனம் செய்யப்பட்டது.

வெளி மாவட்டத் தமிழர்கள் குரல் கொடுத்தால் துவேசம் , வெளி மாவட்ட முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுத்தால் அது தேவ வாக்கா? இன்னும் ஒருவர் கூறுகின்றார், தங்களைக் கண்டால் மடித்துக்கட்டிய வேட்டியை அவிழ்த்து வணக்கம் சொல்லிய தமிழர்கள் இன்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அடிக்க வருகின்றார்கள். இப்படியும் ஓர் ஏளனம். இவவ்வாறு பலராலும் தங்கள் வாய்க்கு வந்த விதமாய்  வசைபாடி இளம் சமுதாயத்தினர் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டுவதானால் உண்மை நிலையினை வெளிக் கொணர நினைத்து வரலாற்றினை தெளிவு படுத்த முன்வந்துள்ளேன்.

கல்முனையின் எல்லைகள்

●             கிழக்கு            – கடல்

●             மேற்கு              – குளம், வயல், ஆறு

●             வடக்கு             – பாண்டிருப்பு, கல்முனை எல்லை வீதி

●             தெற்கு             – தரவைக் கோயில் வீதி

குறிச்சிகள் மூன்று இதன் கிராமத் தலைவர்கள் மூன்று தமிழர்கள்

வணக்கஸ்தலங்கள்

●             இந்துக் கோயில்கள்                           – 12

●             கிறிஸ்தவ தேவாலயங்கள்          – 07

●             பௌத்த விகாரை                                 – 01

கல்வி நிலையங்கள்

01. உவெஸ்லி உயர்தர பாடசாலை

02. கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை இவையிரண்டும் 150 வருடங்களுக்கு முந்திய

   கிறிஸ்தவ பாடசாலைகள் இங்கு கற்பித்த ஆசிரியர்கள் தமிழர்கள.; இங்கு சகல

   மதத்தவர்களும் கல்வி கற்று முன்னேறியவர்கள்.

வைத்திய சாலை

150 வருடங்கள் பழமை வாய்ந்தது கல்முனை ஆதார வைத்தியசாலை. குருக்கள்மடம் தொடக்கம் பாணமை வரை  சகல மக்களும் இங்கு சிகிச்சை பெற்றவர்கள்.

கரைவாகுப்பற்றின் வன்னிமைகள்

01. முதல் வன்னியர் – திரு. செல்லையா

02. திரு.சின்னத்தம்பிப்போடி

03. திரு.சத்துருக்கப்போடி

04. ஜனாப்.K.D.மஜீத்

05. ஜனாப்.M.S .காரியப்பர்.

1946 – 1978 வரையிலுள்ள னுசுழு க்கள் – 15 , இதில்

தமிழர்கள்                    – 05

சிங்களவர்கள்          – 10

இவர்களுடைய காரியாலயங்கள்

01. யோசப் காடியர் இல்லம்         – மணல்சேனை

02. கந்தவாசா                                            – கல்முனை

சௌக்கிய சபை

கரைவாகுப்பற்றின்  தலைநகரம் கல்முனை. 1897- 02 – 19 இல் ஆரம்பம்.

பட்டின சபை  – 1946

பட்டின சபையாக மாற்றமடையும் போது கல்முனைத் தமிழர்களுடன் அண்மிருந்த தமிழர்களைக் கொண்ட பாண்டிருப்பை இணையாது சதி செய்து கல்முனைக்குடியுடன் இணைத்து பிணைக்கும் போது கல்முனைத் தமிழ்க் குறிச்சிகள் மூன்று எனவும்  கல்முனைக்குடி முஸ்லிம் குறிச்சிகள் 05  எனவும் வட்டாரங்களாக்கப்பட்டபோது கல்முனை 3ஆம் குறிச்சியை  மாhரியார் வீதியின் தென்புறம் கல்முனைக்குடியுடன் இணைத்து 3ஆம் வட்டாரமாகவும் , வடபுறம் 2ஆம் குறிச்சியுடன் இணைத்து 2ஆம் வட்டாரமாகவும் பிரிக்பப்பட்டதால் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று குறைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கச்சேரி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போது கரைவாகுப்பற்றின் எல்லைகள்.

வடக்கே – ஓந்தாச்சிமடம் , கோட்டைக்கல்லாறு எல்லை.

தெற்கு             – சாய்ந்தமருது

1961 ஆம் ஆண்டில் அம்மாறை மாவட்டம் பிரயும்போது கரைவாகுப்பற்றுடன் இணைந்திருந்த தனித்தமிழர்களை உள்ளடக்கிய கிரமாங்களான கோட்டைக்கல்லாறு, கல்லாறு ,துறைநீலாவணை ஆகிய மூன்று கிராமங்களையும் பட்டிருப்புத் தொகுதியுடன் இணைத்ததனால் கல்முனைத் தொகுதியில் தமிழ் பிரதி நிதித்துவம் இல்லாது போனது.

இன சுத்திகரிப்பும் நில அபகரிப்பும்

1967 கல்முனை முதலாம் குறிச்சியில் அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றம் நிகழ்த்தப்படவிருந்தது. இதனை கல்முனை 1ஆம் குறிச்சியில் உள்ள தழிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து கல்முனை 3இல் ஒரு தொகுதி முஸ்லிம்களால் தீயிடப்பட்டதனால் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அடுத்து பல நூற்றாண்டு காலமாக  சாய்ந்தமருது முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்ந்த தழிம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.

இழப்புக்களும் , சாய்ந்தமருதும்.

01. ஒரு தமிழ் கிராம அதிகாரி

02. இரண்டு கிராம சேவை உறுப்பினர்கள்

03. இந்துக் கோயில்கள்

04. மெதடிஷ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

05. மயானம் (இந்து ,கிறிஸ்தவ)

பிரதான வீதியில் அமைந்திருந்த ஐயனார் கோயில் அகற்றப்ட்டு பள்ளிவாசல் அகை;கப்பட்டது. அடுத்து பிரதான வீதியில் அமைந்திருந்த கதிரேசன் கோயில் அழிக்கப்பட்டு வர்த்தக நிலையம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து விஷ்ணு கோயில் அழிக்கப்பட்டு சாஹிராக் கல்லூரி அமைக்கப்பட்டது. மெதடிஷ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை இருந்த இடத்தில் பாலிகா மகளிர் வித்தியாலயம் அமைக்கப்பட்டது. தமிழர்களுக்கான மயானம் இருந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் குடியேறி வீடுகள் அமைத்து இன்று சொர்கா புரி போல் அந்த இடம் காட்சியளிக்கின்றது.

கல்முனை தழிழ் பகுதியில் முஸ்லிம் தலைவர்களின் அதிகார துஸ்பிரயோகம்.

01. இராசவாச கேட் முதலியார் M.S. காரியப்பர் 

இவர்களது காலத்தில்  சந்தாங்கேணி குளத்திள் பிரதான வீதியை அண்டிய பகுதியும் சந்தை வீதி வரை நானூறுக்கும் மேற்பட்ட கடைகள் வர்த்தக நோக்கத்திற்காக முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

02. ஜனாப்.M.C.அஹமட் 

இவர் காலத்தில் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து தரவைக்கோயில் வரை தாளையடிக்குளம் சுபீகரிக்கப்பட்டு 272 கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.

03. ஜனாப்.A.R.மன்சூர்

இலர் காலத்தில் தழிழர் ஒருவருக்கு சொந்தமான காணி சுபீகரிக்கப்பட்டு  தொழில் தொடர்பு நிலையம் , நீதி மன்றங்களின் தொகுதிக் கட்டிடங்கள் , குடிநீர்த்தாங்கி  இவைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றியது.

04. பேரியல் அஷ்ரஃப்

அவர் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் கல்முனை முதலாம் குறிச்சியில்  தமிழர்களின் பிரதேசத்திற்குள் வெளிநாட்டில் இருந்து ஒரு தழிழ் கோடீஸ்வரனின் நிதி உதவியுடன்  கட்டப்பட்ட 144 வதிவிடங்களைக் கொண்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் ஒரே அரவில் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

05. ஜனாப் . மயோன் முஸ்தபா

இவர் அமைச்சராக இருந்த காலத்தில் கல்முனை புதிய நகர அபிவிருத்திக்காக வயல் நிலங்கள் 250 ஏக்கர் நெற்செய்கைக் காணிகள் சுபீகரிக்கப்பட்டு வெளி மாவட்ட மாவட்ட முஸ்லிம்கள் பாரிய தொழிற்பேட்டை , வர்த்தக நிலையங்கள் குடியேற்றம் போன்ற சதித்திட்டத்தை அறிந்த நாங்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களுடன் ( கருணா அம்மான்) தொடர்பு கொள்ள அவர் அன்று இருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அவர்களிடம் எங்களை அழைத்துச்சென்று உண்மை நிலையினை விளங்க வைக்க அவர் உடனே தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதனால் அவர்களின் திட்டத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது.

இழந்தவைகள் இழந்தவையாக இருந்தாலும் இருப்பவைகளை காப்பாற்றி இணைந்து வாழ தமிழ் மக்கள் விரும்புகின்றோம். தவறும் பட்சத்தில் தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேறு வழிமுறைகளை விரைவில் கையாள நேரிடும் என்பதனை வேதனையுடன் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

குஞ்சுத்தம்பி ஏகாம்பரம்

கல்முனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *