
திருகோணமலை – கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை ஆகிய இரு சபைகளின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்படாமை தோல்வியடைந்ததால் புதிய தவிசாளர் தெரிவு இடம் பெறவுள்ளது.
இதனை வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
இதனால் குறித்த இரு சபைகளின் புதிய தவிசாளர் தெரிவானது நாளை மறுதினம் வியாழக்கிழமை உரிய சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்படி, கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவு காலை 9.30 மணிக்கும் கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு காலை 11.00 மணிக்கும் இடம் பெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி இரு சபைகளின் தவிசாளர் தெரிவு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இது தவிர சபை உறுப்பினர்களுக்கு இடையில் அதிகார போட்டி நிலவி வருகிறது. யார் அந்த தவிசாளர் கதிரையை அலங்கரிக்கப்போகின்றனர் என எதிர்பார்ப்பு கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.