
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம், தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் உடல் நிலை சற்று மோசம் அடைந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.