
தமிழ் மக்களின் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த சில மணி நேரத்தில் மக்களின் நிலத்தை அபகரித்து வீதி அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
கட்டுவன் மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் தூரம் 26 மீற்றர் அகலத்தை விடுவிக்க 5 ஆண்டுகளாக கடத்தி வந்த படைத் தரப்பு இன்று அவசர அவசரமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதியில் டோசர்கள் மூலம் வீதியமைக்கின்றது.
குறித்த வீதியின் ஆக்கிரமிப்பு பகுதியில் வீதி அமைத்தாலும் அதன் பின்பு 4 மீற்றர் அகல வாய்க்காலிற்காகவும் தனியார் நிலமே பறிபோகும் அவலம் காணப்படுகின்றது.
இவ்வாறு சட்ட விரோதமாக அமைக்கப்படும் வீதி தொடர்பில் இதுவரை எந்த அதிகாரிகளும் வாய் திறக்கவில்லை.
