இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிரித்துள்ளமையால், சுகாதார நடைமுறைகள் கடுமையாக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயன் முறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீண்டும் திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, கொரோனா தொற்றுக்கான முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெற தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்து.
எனினும், அவ்வாறு வரும் அனைவரும் நாட்டிற்கு வந்தவுடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.