வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய கோபம் ஏற்றது – அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் அரவிந்த் சாமி தற்பொது இயக்குனராக மாறியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த நவராசா என்ற ஆந்தாலஜி படத்தில் கோபத்தை மையப்படுத்தி உருவான ரௌத்திரம் பகுதியை அரவிந்த் சாமி இயக்கி இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஆந்தலாஜியில் நான் தான் கோபத்தை தேர்ந்தெடுத்தேன். அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய கோபம் ஏற்றதாக இருக்கும் என நினைத்தேன்.

கோபம் கிடைத்தால் அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என முடிவு செய்தேன். அது நிறைவு பெற்று இப்போது எனவு படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *