
ஜனாதிபதி தனது உரையில் பழைய விடயங்களையே மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி உரை நிகழ்த்துவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவ்வாறான ஒன்றை நான் கேட்கவில்லை. வழமை போன்றே பழைய விடயங்களையும், கடந்த கொள்கைப் பிரகடனங்களில் காணப்பட்ட விடயங்கள், ஆகியவற்றையே மீண்டும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். இரண்டு வருடங்களில் நாடு பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந் நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் விதம் தொடர்பிலேயே அவர் உரை நிகழ்த்த வேண்டும்.
பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெளிநாட்டு நாணய இருப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் நிதிப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கான எந்தவொரு பதிலும் சிம்மாசன உரையில் வழங்கப்படவில்லை.- எனத் தெரிவித்துள்ளார்.