யாழ்.பல்கலை கட்டத்தொகுதியில் தொற்று நீக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக, யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்விசார் ஊழியர்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிர்வாக கட்டத்தொகுதி முழுவதும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துணைவேந்தரின் அறிவுறுத்தலின் படி, நிர்வாகக் கிளையினரால் இந்தப்பணி இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *