காங்கிரஸ் கட்சியினரின் ருவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன!

இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் சமூக ஊடகபிரிவு தலைவர் ரோகன் குப்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “மத்திய அரசு ருவிட்டர் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5000 கணக்குகளை ருவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ருவிட்டர் நிறுவனமோ, அல்லது அரசாங்கமோ தங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் விதிமுறைகளை மீறியுள்ளதாக ருவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply