60 சதவீத மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது : நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ராகுல் கருத்து!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ள நிலையில், 60 சதவீத மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘பெகாஸஸ் மற்றும் விவசாயிகளின் விவகாரம் தொடர்பாக எங்களை பேச அனுமதிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்து விட்டது.

இதனால் 60 சதவீத மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. அவமானப்படுத்தப்பட்டது. ராஜ்ய சபாவில் பாதுகாவலர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *