
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ராபக்சக்கள் நாட்டை சுரண்டியுள்ளனர். நாட்டின் வளங்களை விற்று சாப்பிடுகின்றனர்.
விவசாயிகளுக்கு உரமில்லை, விதையில்லை. விவசாயம் செய்து மன்னர்கள் போல் வாழ்ந்து வந்த மக்கள் இன்று யாசகர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.