கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று !

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகி நாளை வரை இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.

அரசியலமைப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி நேற்று அரசின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *