
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி – இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொட்டாவ, பொலன்னறுவை, நாரம்பனாவ, மித்தெனிய, இரத்மலானை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 – 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.