கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கட்டப்பட்ட தனி வீடுகள் இதுவரையில் பயனாளிகளுக்கு கையளிக்கப்படாமையினால் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கொட்டகலை ஸ்டோனிகிளிப் பகுதியில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக கட்டப்பட்ட குறித்த தனிவீடுகள், பயனாளிகளிடம் கையளிக்காமையால், வீடுகள் காடுகளாக மாறுவதாக பயனாளிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
அத்துடன், ஏழு பேச்சஸ் காணியில் தலா 1 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 தனி வீடுகள் இதுவரை எவருக்கும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
மேலும், குறித்த 25 தனிவீடுகளும் ஒருவருட காலமாக பராமரிப்பின்றி பாழடைந்து போய் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தனிவீடுகளை தொடர்ந்தும் பயனாளிகளுக்கு கையளிக்க தாமதமாகினால், மீண்டும் பணம் விரயம் செய்து புனரமைப்பு செய்ய வேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.