5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அச்சம்!

5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க விமான நிறுவனங்கள் இவ்வாறு அச்சம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர் லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள், அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

5ஜி தொழில்நுட்பத்தால் விமானப் பயணிகள், சரக்கு ஏற்றுமதி மற்றும் மருத்துவ விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, விமான ஓடுபாதைகளின் அருகே இருந்து 5G சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *