சம்பூரில் மோட்டார் குண்டுகள் மீட்பு

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள அம்மன் நகர் காட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட 81 ரக மோட்டார் குண்டு இரண்டை திருகோணமலை விசேட அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளனர்.

சம்பூர் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படை புலனாய்வாளர்கள் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில், சம்பூர் பொலிஸாரின் உதவியுடன் குறித்த மோட்டார் குண்டுகள் இரண்டினையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பனைசார் உற்பத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *