
தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் தீர்வு காண்பதற்கு, இந்தியா தொடர்ச்சியாக தலையிட வேண்டும் என அழுத்தம் கொடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்த ஆவணத்தை இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நேற்று மாலை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா தலையிட வேண்டும்.
இந்தியா அழுத்தம் கொடுப்பதற்காக நாம் அவர்களை தொடர்வோம். நேற்று ஜனாதிபதி ஆற்றிய உரை பிரியோசனமற்றது.
அதில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுமே கூறப்படவில்லை. சும்மா வந்து உரையாற்றி விட்டு சென்று விட்டார். – என்றார்.