கந்தளாயில் நான்காவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்காவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று(19)இடம்பெற்றுள்ளது.

கந்தளாய், இரண்டாம் குலனி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் எந்த விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *