
தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதையே நாம் இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் ஒன்றை தற்போது அனுப்பி வைத்துள்ளோம்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்த பணிகள் தற்போது தான் நிறைவுக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் ஒரு சில கட்சிகளால் இந்த கடிதம் வரையப்படும் போது ,வெறுமனே 13 ஆவது திருத்தத்தை மட்டுமே நடைமுறை படுத்த கோரி எழுதப்பட்ட ஒரு பக்கத்தில் இந்த கடிதம் அமைந்திருந்தது.
டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் அரசுக் கட்சி கலந்து கொண்டது.அதற்கு முன்னர் இடம்பெற்ற 2 கூட்டங்களிலும் கட்சி கலந்து கொள்ளவில்லை.சமஸ்டி மற்றும் சுயநிர்ணயம் இவை தான் மக்கள் எதிர் பார்ப்பது.
அதன் பின்னர் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் மலையக கட்சிகளையும் உள்வாங்கி புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிலே முதலாவது பக்கத்தில் இரண்டாம் பந்தியின் இறுதி இரண்டு வரிகளும் முக்கியானவை.அதிலே சமஸ்டியுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
வடக்கு கிழக்கில் நாம் வாழ்ந்த பூர்வீக இடங்களில் இவை கிடைக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளோம்.
இந்த விடயம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி சேர்க்கப்பட்டு 7 பக்கம் கொண்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்று இனப்பிரச்சனை ஏற்படும்போது அதனை தீர்ப்பதற்காக இந்திய உறுதியளித்த காரணத்தால் தான் இன்று அவர்களுக்கு கடிதம் அனுப்புகின்றோம் – என்றார்.
நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி
தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி
சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்