நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் அவசர சந்திப்பு

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதாரப் பிரிவின் உயர் அதிகாரிகள் குழு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கொரோனா தொற்று நிலைமை குறித்து எடுக்கப்படவேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை சுகாதார தரப்பினை சேர்ந்த பலரும் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றதுடன், பயணக்கட்டுப்பாடு விதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *