நடு வீதியில் அங்கிகளை தீயில் போட்டு எரித்த தேரர்!

திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸபுர விகாரைக்கான துண்டிக்கப்பட்ட நீர் விநியோகத்தை மீள வழங்குமாறு கோரி தேரரொருவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

குறித்த தேரர் ஹம்பாந்தோட்டை பிராந்திய நீர் முகாமைத்துவ காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தண்ணீர் இல்லாததால் தனது அங்கிகளை துவைக்க கூட முடியவில்லை எனக் கூறி அலுவலகம் முன் தனது பல அங்கிகளை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், 111/A, கவுந்திஸ்ஸபுர, திஸ்ஸமஹாராம எனும் முகவரியில் அமைந்துள்ள விகாரைக்கான நீர் கட்டணம் ரூபா 71,991.17 2021 டிசம்பர் 24 ஆம் திகதி வரை செலுத்தப்படாத காரணத்தினால் குறித்த விகாரையின் தேரருக்கு பலமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும், வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் வழங்கும் சலுகை கட்டணத் திட்டத்தில் இந்தக் விகாரைக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 5,000 ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி இருந்தால் தண்ணீர் இணைப்பை துண்டிக்க நீர் வாரியத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு.இருப்பினும், இந்த பகுதியில் வழிபாட்டுத் தலமாக உள்ளதால், தண்ணீர் இணைப்பை துண்டிக்காமல், இந்த நிலுவையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பல சந்தர்ப்பங்களில், அன்புடன் தெரிவிக்கப்பட்டது.

10,000.00 ரூபா 2022 ஜனவரி 13 ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. குடிநீர் கட்டணம் முழுவதுமாக செலுத்தப்படாத நிலையில், அதில் ஒரு பகுதி மட்டும் செலுத்தப்படும் போது குடிநீர் இணைப்பு திரும்ப வழங்கப்படும் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *