
பருத்தித்துறைக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் மற்றும் உடப்பு, சிலாபம், கற்பிட்டியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் பயணித்த நான்கு படகுகளும் மற்றும் 200 கிலோவுக்கு அதிகமான மீன்கள் கடற்படையினரின் மீட்க்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்வர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர்.